இஸ்லாம் - தூய்மையான மனம்கொண்ட ஸலஃப்களின்(முன்னோர்களின்)பாதையில்...........

Thursday 4 August 2011

வணக்கம் என்று சொல்லும் பழக்கம்.

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று ஹிந்து மதம் போதிக்கிறது. இதனால் தான் அவர்கள், சிலையை வணங்குகிறார்கள். சிலையிலும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையினால் தான் இது நடக்கிறது.மனிதர்கள் உள்ளிலும் கடவுள் இருக்கிறான் என்ற நம்பிக்கையால் தான் மனிதர்களுக்கு வணக்கம் சொல்லும் பழக்கம் துவங்கியது.இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக்கு மாற்றமானது.அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்க கூடாது என்று நமது மார்கம் கற்றுதந்துள்ளது.அது மட்டும் இல்லாமல், அல்லாஹ், கல்லிலும், மண்ணிலும், கண்ட இடத்திலும் இல்லை. அல்லாஹ் அர்ஷுக்கு மேல் உயர்ந்துள்ளான். (அவன் அமர்ந்துள்ளான் என்று சொல்வதும் மாபெரும் தவறு.குர்ஆனில் அவன் "இஸ்தவா" அதாவது "உயர்ந்துள்ளான்" என்று தான் உள்ளதே தவிர "அமர்வதற்கு" உள்ள வார்த்தையான "ஜலச" என்ற வார்த்தை இல்லை.) இதனால், ஒருவர் நமக்கு வணக்கம் சொன்னால், நாம் பதிலுக்கு அவருக்கு வணக்கம் என்று சொல்வது அல்லது கை செய்கை செய்வதும் தவறாகும். இது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக்கு மாற்றமானது என்று அவருக்கு நாம் புரிய வைக்கலாம். இதன் பின் அவர்கள் நம்மிடம் வணக்கம் சொல்வதை தவிர்ப்பார்கள். இதே போல, நமது மூதாதயரிடம் வந்த பழக்கம், "கால் தவராக ஒருவர் மீது பட்டால், தொட்டு முத்தம் இடுவது" .இதுவும் கடவுள் எங்கும் இருக்கிறான் என்பதால், கடவுளை அவமரியாதை செய்துவிட்டதாக கருதி செய்யும் பழக்கம். இந்த பலக்கத்தை முஸ்லிம்கள் கை விட வேண்டும். இந்த தாக்கத்தால், தொழுகையில் சஃப்ஃபில் நிற்கும்போது கால் அருகில் வந்தால், குஷ்டம் உள்ளவர் தொட்டது போல் விலகிப்போகிறார்கள்.

No comments:

Post a Comment