இஸ்லாம் - தூய்மையான மனம்கொண்ட ஸலஃப்களின்(முன்னோர்களின்)பாதையில்...........

Tuesday 22 September 2009

இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களைத் தரம் தாழ்த்த முயற்சி செய்யும் பீ.ஜே

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே !! அவனது சாந்தியும், சமாதானமும் அவனது தூதர் மீதும், அவர் குடும்பத்தார் மீதும்அவர் தோழர்கள் மீதும் உண்டாகட்டுமாக.


மிக உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: " உங்களில் விசுவாசிகளுக்கும் , கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். " (அல் குர்'ஆன் 58:11)

"...அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா ? என (நபியே!) நீர் கேட்பீராக ! அறிவுடையோர்தான் நல்லுபதேசம் பெறுவார்கள்." ( அல் குர்'ஆன் 39:9)

அப்துல் அஸீ(z)ஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வாழும் காலத்தில், அவரை பற்றிய ஒரு வதந்தி பரவியது. அவர் பூமியைத் தட்டை என்றும், அது  உருண்டை இல்லை என்றும் சொன்னதாகப் பரவியது. அவர்  அவரின் காலத்தில் தூய்மயான தவ்ஹீதையும் ஸுன்னாஹ்வையும் உலகெங்கும் உள்ள மக்களுக்கு எடுத்துக்கூறும் வழிகாட்டியாக இருந்தார்கள். அது  மட்டுமல்லாமல் ஸுன்னாஹ்வின் அடிப்படையில், முஸ்லிம்  ஆட்சியாளர்களுக்கு கட்டுப் பட்டு இருந்தார்கள். ஷியாக்கள்  அவரை மிகப்பெரிய எதிரியாகக்  கருதினார்கள். கபுர்களை  வணங்கும் சூஃபிகளும், முஸ்லிம்  ஆட்சியாளருக்கு எதிராக கிளம்பும்   கவாரிஜுகளும் அவரை எதிரியாகப் பார்தார்கள். அதனால், அவர்  சொன்ன வார்த்தைகளை வளைத்து  அவர்  பூமி தட்டை என்று சொன்னதாக இட்டுக்  கட்டுவது, அவர்களுக்கு  மிக மகிழ்ச்சியாக இருந்தது. அந்த இட்டுக்கட்டுதலை பீ.ஜே  உண்மை என்று நம்பினாரோ , அல்லது , இப்னு  பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை தரக்குறைவாகப் பேச வாய்ப்பாக நினைத்தாரோ (அல்லாஹு ஆலம்), இவர் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை ,"  ஏன்  இப்பக்கூட  இப்னு பாஸ்னு ஒருத்தர் இருந்தாரே!!  பெரிய  உலக கிபாருல் உலமா என்கிறார்களே!!  அவர்  உலகம் தட்டை என்கிறார்எப்ப? இந்த 20 ஆம் நூற்றாண்டுல !! உலகத்துல  அவர்தான் கிபாருல் உலமாவாம்!! பெரிய  உலமாவாம்!! " என்றெல்லாம்  பேசியுள்ளார்.


இதற்கு தேங்கை முனீப் அவர்கள் மறுப்பு கொடுத்துள்ளார்கள்.


அதில் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மிகத் தெளிவாக சொன்ன விளக்கம் இதோ:

////
" இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி:
பூமி உருண்டையானதா அல்லது தட்டையானதா?”
அவர்கள் அளித்த பதில்:

அறிஞர்களிடத்தில் பூமி உருண்டையானதே. அது உருண்டையானது என்பதுதான் ஏகோபித்த கருத்து என்பதை இப்னு ஹஸ்ம் மற்றும் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதாவது பந்தைப் போன்ற ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. எனினும் நாம் வாழ்வதற்காக அதன் மேற்பரப்பை அல்லாஹ் விரித்து வைத்துள்ளான். அதில் நமக்குத் தேவையான மலைகள், கடல்கள் மேலும் பல உயிரினங்களையும் படைத்துள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான்,”பூமி அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் பார்க்க வேண்டாமா?” (அல்குர்ஆன்: 88:20)
மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளது. அது உருண்டை வடிவில் இருப்பதும் அதன் மேற்பரப்பு விரிக்கப்பட்டுள்ளதும் முரண்பட்டதல்ல. ஏனெனில் உருண்டையாக உள்ள ஒரு மாபெரும் பொருளின் மேற்பரப்பு விரிக்கப்பட்டால் அதன் மேற்பரப்பு விசாலமானதாகவே இருக்கும்.”
/////

ஒரு மிகப்பெரிய ஆலிமை இப்படி தரக்குறைவாகப்பேசியுள்ள பீ.ஜே , இந்த மறுப்புக்கு பதில் கொடுக்க,அவர் வெப்தளத்தில் 10, செப்டெம்பர்,2009 அன்று, மீண்டும் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை இன்னும் தரக்குறைவாக எழுதியுள்ளார்.அதில் “அப்துல்அஸீ(z)ஸ் இப்னு அப்துல்லாஹ் இப்னு பாஸ்” என்ற அவர் பெயரை, தவறாக அப்துல்லாஹ் இப்னு பாஸ் (அதாவது , அவர் தந்தயின் பெயர்) என குறிப்பிட்டு , எழுதியுள்ளார். ஒரு மிகப்பெரிய ஆலிமின் பெயர் கூட சரியாக தெரியாமல், அவர் மேல் அவதூரை பரப்புவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார். பெயரை கூட சரியாக தெரியாத இவர், என்ன ஆய்வு செய்திருப்பார் ? அவரை பற்றி என்ன தெரியும் என பேச வருகிறார்?

மேல் குறிப்பிட்ட ,தேங்கை முனீப் கொடுத்துள்ள தெளிவான செய்தியைக் கொடுக்காமல், கீழ் காணும் செய்தியைக் கொடுத்து, இதில் உயிரோட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்:

////
ஷைக் ஆசிம் அல்கர்யூத்தி கூறுகிறார்:

இப்னு தைமிய்யா, இப்னு கஸீர் உள்ளிட்ட இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது போலவே இப்னு பாஸ் அவர்களும் பூமி உருண்டை என்றே நிரூபித்துள்ளார்.

ஹிஜ்ரி 1394 அல்லது 1395 ஆகிய ஏதோ ஒரு வருடம் இப்னு பாஸ் அவர்களிடம் நான் கேட்டேன்.பூமி உருண்டை எனக் கூறுவோருக்கு மறுப்பு என்று உங்கள் பெயரால் ஒரு நூல் உள்ளதாகக் கூறுகிறார்களே எனக் கேட்டேன்.அதைக் கேட்டு அவர் ஆச்சரியம் அடைந்தார். வ்வாறு இட்டுக்கட்டியவர்களைப் பரிகசித்தார்.
////

இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் ஒரு நூல் தன் பெயரில் நடமாடுவது அவருக்கு தெரியாமல் இருந்தது நம்பும்படி இல்லை என்று பீ.ஜே  எழுதியுள்ளார். பூமி தட்டை என்று ஒரு சொல், இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) சொல்லவில்லை. னாலும் இதை இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும்,   என்று சொல்வது தவறாகும். பீ.ஜேவிஞ்ஞானம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று நினைக்கிறார் போலும்.

மேலும் பீ.ஜே எழுதுகையில்,
////////
தனது அறிவையே மக்கள் சந்தேகிக்கும் வகையில் ஒரு நூல் தன் பெயரில் பரவினால் தனது மற்ற ஆய்வுகளும் கேலிக்குரியதாகக் கருதப்படுமே ? என்று கோபப்பட்டிருக்க வேண்டாமா? சம்பந்தமில்லாத தேங்கை சகோதருக்கே இது கோபத்தை ஏற்படுத்தும் போது இப்ன் பாஸ் எவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டும் ?
////////

இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் விஞ்ஞான அறிவை குறைக்கண்டு, அவரின் இஸ்லாமிய ஆய்வுகளை , இஸ்லாமிய அறிவு உள்ளவர்கள் சந்தேகம் கொள்ளமாட்டார்கள்.

ஆனால், பீ.ஜே அவர்கள், தொழுகைக்குப் பள்ளியின் பக்கம் வரமாட்டார், என மிக வெளிப்படையாக செங்கிஸ் கான் அவர்கள் ,மேடையில் பேசி, பல மாதங்கள் ஆகி விட்டன. பூமி தட்டை என்று நினைப்பதால், அல்லாஹ் குற்றம் பிடிப்பானா? அல்லது தமிழகமெங்கும் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்பவர், தொழுகையில் மிக கவனம் இல்லாமல் இருப்பதை அல்லாஹ் குற்றம் பிடிப்பானா? எது இஸ்லாத்தின் அடிப்படை? தொழுகையா அல்லது விஞ்ஞானமா? பீ.ஜே யின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், தான் அபத்தமாக இஸ்லாதிற்கு விரோதமாக செயல் செய்வதாக ஒருவர் சொல்வதைக் கேட்டு, பீ.ஜே கொதித்துக்கொந்தளித்து இருக்க வேண்டாமா? தன்னை பற்றி தவறாக பரப்பபட்டுள்ளதை அவர் தொலைகாட்சியில் அறிவித்து இருக்க வேண்டாமா? தனது ஈமானையே மக்கள் சந்தேகிக்கும் வகையில் ஒருவர் பேசி இருக்காரே, இது மக்கள் மத்தியில் பரவினால், தனது எல்லா ஆய்வுகளும், தக்வா இல்லாமல் ,செய்த ஆய்வுகள் என்று கேலிக்குரியதாக ஆகிவிடுமே என்று கோபபட்டிருக்க வேண்டாமா?

அவரைச் சூழ்ந்துள்ள மக்கள், அவர் பள்ளிக்குப்போகவில்லை என்றாலும், அவரை "சமிய நா, வ அதா நா" ," கேட்டோம் , கட்டுப்பட்டோம் " என்றுதான் பின்பற்றுவார்களா???!!!!! செங்கிஸ் கான் அவர்கள் வெளிப்படையாகப் பேசியதை , பல மாதங்கள் ஆகியும் இன்னும் மறுப்பு சொல்லாமல், ஏன் மௌனம் சாதிக்கிறார் ? அப்போது செங்கிஸ் கான் சொன்னது உண்மையா? மறுமை நாளன்று முதல் முதலில் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றிதான்.ஒருவர் முஸ்லிம் என்பதற்கு அடயாளமே தொழுகை தான். அதிலேயே பொடுபோக்காக இருக்கும் இவர்,இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)அவர்களை பற்றி பேசுவதற்க்கு என்ன அருகதை இருக்கு??

மேலும் பீ.ஜே எழுதுகையில்,

////////
இப்ன் பாஸ் கூறுகிறார்:
"நிலவில் மனிதன் இறங்கியதை நான் மறுப்பதாகவும், அவ்வாறு கூறுவோரும் ,பூமி உருண்டை எனக் கூறுவோரும், பூமி சுற்றுகிறது எனக் கூருவோரும் காஃபிர்கள் என நான் கூறியதாக சியாசா என்ற இதழ் என் பெயரில் பேட்டியை வெளியிட்டுள்ளது. அது தவறாகும்.அவர்கள் வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை. எடுத்து எழுதும் போது ஏற்பட்ட பிழையே காரணம். எனது உரை பதிவு செய்து அச்சிடப்பட்டுள்ளது. நிலவில் மனிதன் இறங்கினான் என்பதை நான் மறுக்கிறேன். இவ்வாறு நம்புவோரைக் காஃபிர்கள் என்று கூறுவதையும் நான் மறுக்கிறேன்.தெளிவான விளக்கம் கிடைக்கும் வரை இதை உண்மை என்றோ பொய் என்றோ கூறாமல் இருக்க வேண்டும். இப்னுல் கய்யிம் அவர்கள் பூமி உருண்டை எனக் கூறியதை நான் எனதுரையில் எடுத்துக் காட்டியுள்ளேன். ஆனால் பூமி சுற்றுகிறது என்பதை நான் மறுக்கிறேன். ஆனால் அவ்வாறு கூறுவோர் காஃபிர்கள் என்று நான் கூறவில்லை. சூரியன் ஓடாமல் நிற்கிறது என்று கூறுவோர் காஃபிர்கள் என்று நான் கூறுகிறேன். இது தெளிவான குர்'ஆன் வசனத்துக்கு நேர் முரணாகும். "
////////

இந்த கூற்றின் படி, இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், நிச்சயமாக பூமி உருண்டை என்று கூறியதாக எழுதியுள்ளார். இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களே பூமி உருண்டை என்று  சொன்னாலும், பீ.ஜே யால், அதை ஜீரணிக்க முடியவில்லை. ஏதோ ஒரு புத்தகம், இப்ன் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) எழுதியதாக கூறுகிறாரே, அந்த புத்தகத்தில், இப்ன் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அப்படி பூமி உருண்டை இல்லை என்று சொன்னதாக வரும் வரிகளை இங்கு அவர் குறிப்பிடவே இல்லை. ந்த புத்தகத்தை இவர் பாக்கவே இல்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பூமி உருண்டை இல்லை என்று சொன்னதாக ஒரு ஆதாரம் கூட கொடுக்காமல், யூகங்கள் மற்றும் மனோயிச்சையின் அடிப்படையில், பீ.ஜே கீழ் கண்டவாறு எழுதியுள்ளார்:

////////
இந்த இடத்தில் இப்னு பாஸ் பூமி உருண்டை எனக் கூறுகிறார் என்பது உண்மை தான். ஆனால் பூமி உருண்டை இல்லை என்பது அவர் கூறியது தான். அவர் முரண்பட்டு இரண்டு விதமாகக் கூறியுள்ளார் என்பது தான் இதிலிருந்து தெரிய வருமே தவிர அவர் சொல்லாத ஒன்றை நானாக இட்டுக்கட்டிச் சொன்னேன் என்பதற்கு இது ஆதாரமாகாது. இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் சுட்டிகாட்ட விரும்புகிறோம். இப்னு பாஸ் அவர்கள் தெளிவான ஆராய்ச்சி செய்பவர் அல்ல என்பதற்கு உதாரணமாகத் தான் இதைக் கூறினேன்.இவர்களின் மறுப்பின் அடிப்படையில் பார்த்தால் அந்த அடிப்படையான விஷயம் நிரூபனமாகிறது. அதாவது பூமி சுற்றவில்லை என்று அவர் சொன்னதை இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பூமி உருண்டை கிடையாது என்று அவர் கூறியதைத் தான் மறுக்கிறார்கள். இவர்கள் எதை ஒப்புக் கொள்கிறார்களோ அதன்படி பார்த்தாலும் இப்ன் பாஸ் சரியான ஆய்வாளர் அல்ல என்பது உறுதியாகிறது. குறிப்பிட்ட மனிதன் பீடி குடித்தான்.இவன் நல்லவன் இல்லை என்று ஒரு மனிதனை பற்றி நான் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இதை மறுக்கப் புகுந்த பலவேஷம் டாட் காம் அவன் பீடி குடித்ததாகக் கூறியது அவதூறு, இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் சிகரெட் தான் குடித்தார் என கூறினால் அது எப்படி இருக்குமோ அப்படித்தான் பலவேசத்தாரின் மறுப்பு அமைந்துள்ளது. இதை பரப்புவோரும், பதிவு செய்வோரும் பூமி சுற்றவில்லை என்றும், மனிதன் நிலவில் இறங்கவில்லை என்றும் தெளிவாக அறிவித்து விட்டு பரப்பட்டும். இதற்கு அவர்கள் தயார் இல்லை என்றால் ????
////////

இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஒரு கருத்தை மட்டுமே இங்கே குறிப்பிட்டு, முரணான இரண்டு கருத்துகள் கூறியதாக பீ.ஜே எழுதியுள்ளார்.இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) பொய் சொல்பவர் என்பதை மறைமுகமாக இதில் குறிப்பிடுகிறார். இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மறுத்த செய்தி கிடைத்த பிறகு, ஏன் தேவை இல்லாமல் குறுக்கு விசாரனை செய்து, இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்லாத ஒரு விஷயத்தை அவர் சொன்னார் என நிரூபிக்க முயல்கிறார்? இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தெளிவான ஆராய்ச்சி செய்பவர் இல்லை என்பதற்கு உதாரணமாகத் தான் பீ.ஜே இதைக் கூறுவதாக சொல்கிறார்இதற்கு காரணம் என்னவென்றால், உலகத்தில் , தன்னை "இஸ்லாமிய ஆராய்ச்சியில்(?) " மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்பதை மக்கள் முன்னே சொல்ல விரும்புகிறார்.ஆம். பீ.ஜேயை ஆராய்ச்சியில்(?) மிஞ்ச உலகத்தில் யாரும் இல்லை தான். ஆராய்ச்சி என்ற பெயரில், அவர் இஸ்லாதில் எல்லா விஷயங்களிலும், வரம்பு இல்லாத புதிய யோசனைகளை செய்து, இன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும்தன் மனோயிச்சையின் படி, மறுக்கிறார், குர்ஆன் தவறாக எழுதியுள்ளார்கள் என சொல்கிறார். சஹாபாக்களை விட தனக்கு இஸ்லாம் நன்றாக தெரியும் என சொல்கிறார்சஹாபாக்களை ஆபாசமாக விமர்சிக்கிறார், சுலைமான் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை "அந்த ஆள்" ,"இந்த ஆள்" , என சொல்கிறார்.நபிமார்களையும் சஹாபாக்களையும் மரியாதையாகப் பேசத் தெரியாத இவர், தான் செய்த வரம்பு மீறிய ஆராய்ச்சிகளை(?) செய்யாமல் இருந்த, ஒரு மாபெரும் அறிஞரை தரக்குறைவாகப் பார்க்கிறார்.

நிலவில் மனிதன் இறங்கியதை இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நம்பாமல் இருந்தது பீ.ஜேயிக்கு ,அவர் சரியான ஆய்வாளர் அல்ல என்பதற்கு சான்றாம். எல்லாவற்றிலும் ஆராய்ச்சி செய்யும் பீ.ஜே நிலவில் மனிதன் இறங்கியதாக அமேரிக்கா செய்த நாடகத்தை ,அப்படியே நம்பியுள்ளார். ஆம். மனிதன் நிலவில் இன்று வரை இறங்கவில்லை என்ற சான்றுகள் அவர் ஆராய்ச்சிக்கு தென்படவில்லை.

நிலவில் மனிதன் இறங்கியது போல் செயற்கையாக படம் எடுத்து உலகை எல்லாம்
அமேரிக்கா ஏமாற்றியுள்ளது. இது எதற்கென்றால், அமேரிக்காவை மிஞ்ச யாரும் இல்லை என்று உலகுக்கு தம்பட்டம் அடிக்கத்தான்.அதே போல், செப்டெம்பெர்  11, 2001 அன்று உலக வர்த்தக மய்யத்தை விமானம் தாக்கிதான் அது உடைந்தது என்று உலகுக்கே காதில் பூ சுற்றியது . அது அமேரிக்காவின் நாடகம் என்று  "Loose change” என்ற ஒரு டாக்குமென்டரி ,தெளிவாக நிரூபித்தது. னாலும், இந்த ஆதாரங்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, உலகயே ஏமாற்றி, அஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளை மனித வேட்டை ஆடியது.

அதே போல், நிலவில் மனிதன் காலெடுத்து வைக்கவில்லை என்ற உண்மை மூடி மறைக்கப்பட்டு விட்டது. அதற்கான ஆதாரங்களை இங்கே காணலாம்:


சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அந்த வெப்தளத்தில் கூறப்பட்டவை:

1.மனிதன் நிலவில் கால் வைத்ததாக 1969-இல் சொல்லப்பட்டது. இன்று 2009 ஆகியும், வேறு யாரும் நிலவுக்கு போக முடியவில்லையே ஏன்? 1969-ஆம் ஆண்டை விட இன்றய தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறியும் கூட இது நடக்காமல் இருந்தது ஏன்?

2. அவர்கள் கொடுத்த புகைப்படங்களில் , அமேரிக்க கொடி காற்றில் ஆடுவதுபோல் தோற்றம் அளிக்கிறது.காற்றில்லா நிலவில் எப்படி இது சாத்தியம்?

3. புகைப்படங்களில்,காலணிகளின் அச்சுகள், மிக தெளிவாக தெரிகின்றன. தண்ணீர் இல்லாத நிலவின் பகுதியில், இப்படி துல்லியமாக காலணிகளின் அச்சுகள் உருவாக சாத்தியமே இல்லை.

இப்படி பல தகவல்களும் அந்த வெப்தளத்தில் காணலாம். பீ.ஜேயின் பாணியில் சொன்னால், பீ.ஜே ஒரு ஆராய்ச்சியாளர் இல்லை என்று, இதில் நிரூபணம் ஆகிறது.

அடுத்ததாக, இப்ன் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பூமி சுற்றவில்லை என்று நம்பியதாக எழுதியுள்ளார்.

பூமி சுற்றிக்கொண்டு சூரியனை வலம் வருகிறது என்று மனிதன் கண்டு பிடித்தான்.
அன்றுள்ள விஞ்ஞானம், சூரியன் நகரவில்லை என்று குர்'ஆனுக்கு முரணாக
கூறியதுஆனால் அல்லாஹ் தன் குர்'ஆனில் சொல்கிறான்:

"சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது,அது(யாவரையும்) மிகைத்தவன், ன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்." (அல் குர்'ஆன் 36:38)

"........அவனே சூரியனையும்,சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான் ;ஒவ்வொன்றும் (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையின்படி ஓடிக் கொண்டிருக்கின்றன...."
( அல் குர்'ஆன் 13:2)

சூரியன் நகர்கிறது என்று அல்லாஹ் சொல்வதினால், சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது என்றும் பூமி சுற்றவில்லை என்றும் ,இப்னு பாஸ்(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நினைத்திருப்பார்.இதற்கு மாற்றமாக சொல்லும் விஞ்ஞானத்தின் கருத்தைப் புறக்கணித்திருப்பார்.

பூமி சூரியனை சுற்றினாலும், சூரியன் ஒரு இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானம்  சமீபமாகத்தான் கண்டுபிடித்தது.அது பிரபலமாக மக்களுக்குத் தெரியவில்லை. ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னால், பாட புத்தகங்களில் இதை நாம் காண முடியாது.1999-ஆம் ஆண்டு, 88 வயதில் மரணம் அடைந்த இப்னு பாஸ் அவர்களுக்கு விஞ்ஞானத்தின் நவீன கண்டுபிடிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

ஆகையால், குர்'ஆனுக்கு முரணாக விஞ்ஞானம் கூறினால், விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற தக்வாவின் அடிப்படையில் தான் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் "பூமி சுற்றுகிறது" என்பதை மறுத்து இருப்பார்.

பீ.ஜே அவர்களுக்கு ," பகுத்தறிவு" மற்றும்," விஞ்ஞானம் " தான் அடிப்படையாகும்.

ஒவ்வொரு இரவின்,மூன்றில் ஒரு பங்கின்கடைசிப் பகுதியில்  , அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகிறான் என தெளிவான ஹதீஸ் உள்ளது..

நபி  (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியதாக ,அபூ ஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கிறார்,
ஒவ்வொரு இரவின்,மூன்றில் ஒரு பங்கின்,கடைசிப் பகுதியில் ,மிக உயர்ந்தோனும், பாக்கியவானுமாகிய நமது இரட்சகன் , கீழ் வானத்திற்கு இறங்குகிறான். மேலும் சொல்கிறான், " என்னிடம் யாராவது பிரார்த்தனை செய்வோர் இருக்கிறார்களா? ,நான் அவர்களின் பிரார்த்தனைக்கு பதில் கொடுக்கிறேன். என்னிடம் கேட்பவர் யாராவது இருக்கிறார்களா? ,நான் அவர்கள் கேட்பதை நான் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்பு கேட்பவர் யாராவது இருக்கிறார்களா? ,நான் அவர்களை மன்னிக்கிறேன்." ( ஸஹீஹ் புகாரி-அரபி எண் 7013)--

பூமி உருண்டை என்பதால், கடைசி இரவு பூமியில், எப்போதும் ஒரு பகுதியில் ,இருந்து கொண்டே இருக்கும். ஆகையால் , அல்லாஹ் எப்போதுமே கீழ் வானத்திலேயே இருப்பானா ? என்று கேள்வி கேட்டு அல்லாஹ் கீழ் வானத்திற்கு வருவதை பீ.ஜே மறுக்கிறார். பூமி உருண்டை என விஞ்ஞானதிற்கு முரணாக அந்த ஹதீஸ் இருப்பதாக நினைத்து ,அல்லாஹ் இறங்கவில்லை, அவன் அருள் தான் இறங்குகிறது என்று ஹதீஸில் இல்லாத   வேறு அர்தங்களை கொடுக்கிறார். அருள் எப்படி ," என்னிடம் யாராவது பிரார்த்தனை செய்வோர் இருக்கிறார்களா?" என்று பேசும் ?

இது அல்லாஹ்வின் சிஃபத்தை மறுக்கும் மாபெரும் குற்றமாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) சொன்ன வார்த்தைகளை ,விஞ்ஞானத்தோடு ஒப்பிட்டு ,பியே சொன்னாலும் பறவா இல்லை,விஞ்ஞானம் தான் முக்கியம்,என நினைக்கிறாரா? இந்த ஹதீஸில் அல்லாஹ் நேரடியாக இறங்குவதாக தெளிவாக
இருக்கிறது. இந்த ஹதீஸை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் சொல்லும்போது அதற்க்கு சஹாபாக்கள் அல்லாஹ் இறங்குவதாகத்தான் புரிந்தார்களே!! என்று கேட்டால், சஹாபாக்கள் பூமி தட்டை என்று நினைத்தார்கள்,அதனால் தான் அவர்களுக்கு புரியவில்லை, என பீ.ஜே விளக்கம் சொல்கிறார்.

பூமி உருண்டை என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கும் தெரிந்திருக்காதே!! நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூட அல்லாஹ் நேரடியாக இறங்கியதாகத்தானே சொன்னார்கள்; அப்படித்தானே அவரும் புரிந்திருப்பார்?? எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கே தெரியாத ஒரு விளக்கத்தை சொல்லி ,அவர்களுக்கே இஸ்லாத்தை சொல்லிக் கொடுக்க முற்படுகிறார்.

அல்லாஹ் அவனுக்கே தகுதியான விதத்தில் கீழ் வானதிற்கு வருவான். அவன் வருகையை ,மனிதன் வருவது போல் கற்பனை செய்து அதன் காரணமாகத்தான் அதை மறுக்கிறார். எப்படி அவன் கைகள் அவன் படைக்கப்பட்டவை போல் இருக்காதோ, எப்படி அவன் கேட்கும் திறன் ,மற்றும் பார்கும் திறன்,மற்றவை போல இருக்காதோ, அதே போல், அவன் கீழ் வானத்திற்கு அவன் தகுதிக்கேற்ப, இறங்குவான்.அவன் இறங்குவது போல், யாரும் இறங்க முடியாது.அவன் இறங்கும் தன்மையை நாம் புரிந்து கொள்ளவும் முடியாது.

"...அவனை போன்று எதுவுமில்லை. அவன் (யாவற்றையும்) செவியேற்பவன் ; பார்ப்பவன்." (அல் குர்'ஆன் 42:11)

'.......எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!'
(அல் குர்'ஆன் 7:33)

"ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்(வே அதனை) அறிவான், நீங்களோ அறிய மாட்டீர்கள்."
(அல் குர்'ஆன் 16:74)

அவன் எப்படி இறங்குவான் என்பதை கற்ப்பனை செய்யும் அளவுக்கு பீ.ஜே யிக்கும், இந்த உலகத்தில் வாழும் யாருக்கும், அறிவை அல்லாஹ் கொடுக்கவில்லை.

ஆகயால், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றாலும், அது விஞ்ஞானத்திற்கு மாற்றமாக இருந்தால் மறுக்கும் போக்கு சரியா? அல்லது, அல்லாஹ்வின் குர்'ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு மாற்றமாக விஞ்ஞானம் இருந்தால், விஞ்ஞானத்தை ஏற்காமல் இருப்பது சரியா?

குர்'ஆனுக்கு முரணாக விஞ்ஞானம் கூறினால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது, என்ற இப்ன் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்)அவர்களின் அடிப்படையினால் அவரை, "சரியாக ஆய்வு செய்பவர் இல்லை" என்று சித்தரிப்பது என்ன ஒரு அபத்தம்?????

நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு கூட இந்த விஞ்ஞான உண்மைகள் தெரிந்திருக்காது.இப்படி உள்ள விஷயங்களைத் தெரியவில்லை என்று இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களை "பீடி" குடிப்பவனோடு ஒப்பிடுவது சரியா ?சஹாபாக்களுக்கு கூட மார்க அறிவு இல்லை என்று அவர்களை கேலி செய்யும் இவர், இஸ்லாத்தின் மிகப்பெரிய அறிஞர்களை கேலி செய்வது, சாதாரண விஷயம் தான். இன்று சஹாபாக்களையும் உலமாக்களையும் கேலி செய்யும் இவர், நாளை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களைக் கூட இப்படி கேலிசெய்ய மாட்டார் என என்ன நிச்சயம்? அப்படி செய்தால் கூட, மக்கள் அவரை," சமியனா, வ ஆதானா" (கேட்டோம், பின்பற்றினோம்) என்று தான் பின்பற்றுவார்களா??இவர் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறார்?

இதெற்கெல்லாம், காரணம் என்னவென்றால், பீ.ஜே, தன்னை மிஞ்சி ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர்,யாரும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்வதற்குதான். இவர் 72 கூட்டங்கள் என ஒரு தொடர் சொற்பொழிவு செய்துள்ளார். அந்த வழிகெட்ட கூட்டங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் , இவருக்கு வஹி மூலமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தானா ?! இவை எல்லாம், ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. நேர்வழியில் இருந்த ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள், அவர்கள் காலத்தில் வாழ்ந்த வழிக்கேடர்களை அடையாளம் காட்டியுள்ளார்கள்.அந்த நேர்வழியில் வாழ்ந்த அறிஞர்களின் பெயர்களை சொல்லி ,அவர்கள் மூலமாக, இந்த அறிவை இவர் பெற்றதாக மக்கள் மத்தியில் சொன்னதே இல்லை. தாந்தோன்றித்தனமாக நடந்துக் கொள்கிறார். உலகத்தில், ஒரு இஸ்லாமிய அறிஞரை கூட இவர் பரிந்துரைப்பதே இல்லை. அவர்களின் குறைகள் மட்டுமே தேடி அம்பலப்படுத்தி ,அதில் கேலிகள் செய்கிறார்.அப்போது, உலகத்தில் இவரும், இவரைச் சார்ந்துள்ளவர்களும் மட்டும்தான் சரியான கொள்கையில் இருக்கிறார்களா???? மற்றவர் எல்லோரும் வழிகேட்டில் இருக்கிறார்களா ?

" யார் தனக்கு நேர்வழி தெளிவான பின்னரும் இத்தூதருடன் முரண்பட்டு, முஃமினீன்கள் (நம்பிக்கை கொண்டோரின்) வழி அல்லாததை பின்பற்றுகின்றானோ அவன் செல்லும் வழியிலேயே அவனை செல்லவிட்டு,அவனை நாம் நரகத்தில் நுழைவிப்போம்.செல்லுமிடத்தில் அது மிக கெட்டதாகும். " (அல்குர்'ஆன் 4:115)







இந்த வசனம் இறங்கும்போது," முஃமினீன்கள்" என்பவர்கள் நபி( ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்களோடு, சஹாபாக்கள் மட்டும்தான் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் விட 'நாம்' தான் இஸ்லாமை நன்றாக புரிய முடியும் என்று வாதிடும் பீ.ஜே அவர்களை சார்ந்து உள்ளவர்களே !! இந்த அல்லாஹ்வின் வசனத்தை சிந்த்தித்து பாருங்கள். சஹாபாக்கள் தவறாக இஸ்லாத்தை புரிந்தார்கள், நாம் தான் சரியாக புரிகிறோம் என்றால், நாம் சஹாபாக்கள் செல்லாத வழிகளில் செல்கிறோம் அல்லவா? அப்போது, நாம் அல்லாஹ்வின் எச்சரிக்கையை யோசிக்க வேண்டாமா??


முகீரா இப்ன் ஷுஅ பா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக,
"என் உம்மத்தில் ஒரு கூட்டம் என்றுமே சத்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.   அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை, அவர்கள் அதில் மிகைத்திருப்பார்கள்."
 ( புகாரி, அரபி எண் 3640)

ஸவ்பான் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக,
"என் உம்மத்தில் ஒரு கூட்டம் என்றுமே ஹக்கில் (சத்தியத்தில் ) தெளிவாக நிலைத்திருக்கும்.அவர்களுக்கு துன்பம் தருபவர்களால் எந்த தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை, அவர்கள் இதே நிலையில் இருப்பார்கள்."
 ( முஸ்லிம், அரபி எண் 1920)

ஜாபிர் இப்ன் அப்துல்லாஹ் (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கிரார்கள்,
நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியதாக,
"என் உம்மத்தில் ஒரு கூட்டம் என்றுமே சத்தியதிற்க்காக போராடிக்கொண்டு கொண்டு இறுதி நாள் வரை இருப்பார்கள்." ( முஸ்லிம்,அரபி எண் 1923)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில், எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் உருவானாலும்,
" சத்தியத்தில் இருக்கும் கூட்டம்" நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காலம் முதல், கியாம நாள் வரை இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், உண்மை கூறினார் என்று நம்பும் மக்களுக்கு இதில் எள் அளவும் சந்தேகம் இருக்க முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருந்து கொன்டே தான் இருக்கிறது.அவர்கள் தான்  ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழி  முறையில் உள்ள மிகப்பெரிய உலமாக்கள். தர்காக்கள் முளைத்து,ஷிர்குகளும், அனாச்சாரங்களும் பெருகி கிடந்தாலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காலம் முதல் இன்று வரை, தவ்ஹீதையும் சுன்னாஹ்வையும் மக்கள் மத்தியில் பரப்பியவர்களாக, உண்மையான உலமாக்களும், அவர்களை சூள்ந்து வாழ்ந்த நல்லவர்களும், வாழ்ந்து வந்தார்கள் அவர்களில் சிலர் தான் : இமாம் ஷாஃபி,இமாம் மாலிக், இமாம் அஹ்மத் பின் ஹன்பல்,இமாம் இப்னு தய்மிய்யா, இப்னல் கய்யிம், இப்னு ரஜப், இப்னு கஸீர், குர்துபி, தஹபி, புகாரி,முஸ்லிம்,நஸயீ,முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்,சமீபமாக இருந்த இமாம் நாசிருதீன் அல் அல்பானி, இமாம் இப்ன் பாஸ் ,இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்), இன்று உயிரோடு இருக்கக்கூடிய ஷைக் ஆல் அஷ்ஷைக்,ஷைக் சாலிஹ் அல் ஃபவ்ஸான், ஷைக் ரபீய், ஷைக் உபைத் அல் ஜாப்ரீ,ஷைக் அப்துல் முஹ்ஸின் அல் ஆபாத், மற்றும் பலர் (ஹஃபிதஹுமுல்லாஹு அஜ்மயீன்). இதில் அன்றுள்ள சஹாபாக்கள் முதல் இன்றுள்ள உலமாக்கள் வரை ஒரே "அடிப்படை கொள்கை"யில் தான் இருக்கிறார்கள். இறுதி நாள் வரை இது நிச்சயமாக நீடிக்கும்.

பீ.ஜே தான் சத்தியத்தில் இருக்கிறார் என்று நினைத்தால், நிச்சயமாக இவரைப் போலவே சத்தியத்தில்(?) இருப்பவர்கள் , சஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை இருந்திருக்க வேண்டும். அப்படி யாராவது இருந்தார்களா என்றால் ,இல்லை.

பீ.ஜே சஹாபாக்களை கேலி செய்து குறைக்கண்டது போல , ஷியாக்கள் மற்றும் கவாரிஜுகள்தான் செய்துள்ளார்கள். பீ.ஜே சூனியத்தை மறுத்தது போலவும், பகுத்தறிவுக்கு முக்யத்துவம் கொடுத்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று சொன்னது போலவும் , அல்லாஹ் கீழ் வானத்திற்கு வர மாட்டான் என்று சொல்வது போலவும் முஅதஸிலாக்கள் தான் செய்துள்ளார்கள்.இவரின் ஸலஃப்கள்(முன்னோர்கள்) யார் ? வழிகேடர்கள் தான் இவருக்கு முன்னோர்களாஅல்லது, நபி சொன்ன வார்த்தைகள் பொய்யானதா??

பீ.ஜே யின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் அடிப்படை , காலம் காலமாக இருந்த அடிப்படை இல்லை. 1430 வருடங்களாக தவ்ஹீதை நிலை நாட்டி இருந்த உலமாக்கள் ,  "அக்கீதா" என்று சொல்லப்படும் "அடிப்படை கொள்கை" விஷயத்திலும், "சலஃபி மன்ஹஜ்" ,என்று சொல்லப்படும் "சலஃப்களின் வழிமுறை" விஷயத்திலும், எல்லோருமே ஒருமித்த கருத்தில் இருந்தார்கள். உதாரணமாக நம்பிக்கையின் விஷயத்தில் , இவர்களில், யாருமே, சூனியத்தை மறுக்கவில்லை.

சூனியத்தை மறுக்க வேண்டும் என்று,  "ஹாருத், மாருத்" என்பவர்கள் ஷய்தான்கள் என பீ.ஜே அவர் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்கு ஆதாரமாக இமாம் குர்துபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அப்படிப்பட்ட கருத்தில் இருந்ததாக எழுதியுள்ளார்.ஹாருத், மாருத் என்பவர்கள் மலக்குகளா அல்லது ஷய்தான்களா என்று தான் கருத்து வேறுபாடு இருந்ததே தவிர, பில்லி சூன்யம் என்பதை சத்தியத்தில் இருந்த யாரும் மறுத்ததில்லை.
இவரே பெரிய அறிஞராகக் கருதி, ஆதாரமாக குறிப்பிட்ட இமாம் குர்துபி(ரஹிமஹுல்லாஹ்) அவர்களே இவ்வாறு கூறியுள்ளார்கள்:

"குர் ஆனில் ஒன்றிர்க்கு மேற்பட்ட வசனங்களும் ஸுன்னாவில், ஒன்றிர்க்கு மேற்பட்ட
 ஹதீஸ்களும் மூலமாக பில்லி சூன்யம் இருப்பதாகவும் அது யார் மீது செய்யப்பட்டதோ ,அவர் மீது பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெளிவாகிறது. யார் இதை மறுக்கிறாரோ அவர் ஒரு காஃபிர்.(ஏன் என்றால்) அல்லாஹ்வும், அவன் தூதரும் சொல்லிய, மிக பிரபலமாக அறியப்பட்ட ஒன்றை அவர் மறுக்கிறார்.இதை வெளிப்படையாக ஒருவர் மறுத்தால், அவர் ஒரு முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்). பில்லி சூன்யம்  என்பது மனிதர்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்த முடியும், அவர்கள் மனதில் விருப்பு, வெறுப்பு, மற்றும் தீய எண்ணங்களை ஏற்படுத்த முடியும். கணவன் மனைவிக்கிடையில் பிரிவினை ஏற்படுத்த முடியும்,ஒருவருக்கு வலி மற்றும் நோய்களை ஏற்படுத்த  முடியும். இவை எல்லாம் நிஜ வாழ்க்கையில் அறியப்பட்டவையே. இதை மறுப்பது பிடிவாதத்தனமாகும்."

(ஆதாரம் : ஷர் ஹல் குர்துபி அலா ஸஹீஹ் முஸ்லிம், 6/6 )

பீ.ஜே ஒரு காஃபிர் என்று இதனால் நான் சொல்லவில்லை.(அல்லாஹு ஆலம்)
சூன்யத்தை நம்பாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை சுட்டிக்காட்டத்தான் இதை குறிப்பிட்டுள்ளேன். இவர் மீதுள்ள பாசத்தினால், இவர் நம்பும் விதத்தில் நம்பி நாம் குஃப்ர் செய்தாலும் பறவா இல்லையா ?? கபுர்களிடம் துவா கேட்பது ஷிர்க் என்பதை நாம் சொல்லியும், கபுர் வணங்கிகள், கேட்காமல் இருப்பது போல, ஒரு செயலை ஒரு மாபெரும் அறிஞர் "குஃப்ர்" என்று சொல்லியும், அதை நாம் கவனம் செலுத்தாமல் இருப்பது சரியாபீ.ஜே வை எதிற்கும் எல்லோரும், அவர் மீது காழ்ப்புணர்சியில் எதிற்கிறார்கள் என்றால், என்றோ வாழ்ந்து, இறந்துபோன ஒரு மாபெரும் அறிஞருக்குக் கூட ,பீ.ஜே மேல் எப்படி காழ்ப்புணர்சி இருக்க முடியும்?

"... அறிவுடையோர் தான் நல்லுபதேசம் பெறுவார்கள்." (அல் குர்'ஆன் 39:9)

பீ.ஜே தான் உலகத்தில் மிகப்பெரிய ஆலிமாக இருந்தால், அவர் உலகதிற்கே வழி காட்டியாக இருக்க வேண்டும். ஆனால், அவர் புகழ் தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். இவர் மட்டும் தான் நேர்வழியில் இருக்கிறார் என்றால், தமிழ் மக்கள் மட்டுமே நேர்வழி பெற வேண்டும் என அல்லாஹ் நினைத்திருப்பானா?அல்லது உலகம் முழுவதும் இவரின் மகத்தானதாக கருதப்படும் கல்வி போய் சேர்ந்திருக்க வேண்டாமா? உதாரணமாக பில்லி சூன்யத்தில் உலகத்தில் வாழும் எல்லா தவ்ஹீத் பேசும் முஸ்லிம்களும் நம்பி இருக்கிறார்கள், இவரை சார்ந்துள்ளவர்களைத் தவிர. அப்போது இவரின் பார்வையில், உலகெங்கும் ஒரு மூட நம்பிக்கையில் 1430 வருடமாக மூழ்கி இருக்கிறார்களா? அப்போது, நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவரகள் 'சத்தியதில்' தெளிவாக (அவர் காலம் முதல் இறுதி நாள் வரை ) ,ஒரு கூட்டம் இருப்பார்கள் என்று சொன்ன வார்த்தைகள் பொய்யானதா ? ஆகையால், பீ.ஜே அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டும்.

பீ.ஜே அவர்களைச் சார்ந்துள்ள மக்களே !! மற்ற உலமாக்களிடமும் நீங்கள் மார்கம் தேடுங்கள். பீ.ஜே அவர்களைத் தவிர வேர் யாரிடமும் மார்கம் தேடாமல் இருப்பது, இவரை தக்லீத் செய்வதேயாகும். தக்லீதை எதிற்கும் நீங்களே இப்படி செய்வது சரியானதா?

" அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் கடவுளராக ஆக்கிக் கொண்டார்கள்” (9:31)







(முன்பு கிறிஸ்தவராக இருந்த) அதிய்யுப்னு ஹாதிம் (ரழியல்லாஹுஅன்ஹு) இந்த வசனத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது அந்த மக்கள் அவர்களை (பாதிரிகளையும், துறவிகளையும்) வணங்கிக் கொண்டிருக்கவில்லையே என்று கூறினார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், சரிதான்! ஆனால் அந்த பாதிரிகளும், துறவிகளும் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் என்றும், அல்லாஹ் ஹலாலாக்கியவற்றை ஹராம் என்றும் கூறும்போது அவர்களும் அவ்வாறு ஏற்றுக் கொண்டார்களே! அதுதான் அவர்களை அவர்கள் வணங்குவதாகும்." என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, பைஹகி)


அன்புள்ள சகோதரர்களே , மார்க விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருந்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழியை, உத்தம சஹாபாக்கள் எப்படி புரிந்து நடைமுறைப் படுத்தினார்களோ, அப்படியே நாமும் செய்து, அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டானே ,அத்தகையோரின் கூட்டத்தில்,நம் அனைவரையும் இடம்பெறச் செய்வானாக.

-- மஸ்'ஊத் பின் அஹ்மத்
29, ரமதான், 1430 ஹிஜ்ரா (19, செப்டம்பர் 2009) 

1 comment:

aa said...

அஸ்ஸலாமு அலைக்கும். தயவு செய்து பார்க்க:http://infoadirai.blogspot.com/2010/06/blog-post.html

Post a Comment